பொதுவாக நம்முடைய வீட்டின் சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும். நோய்களை உருவாக்குவதில் கரப்பான் பூச்சியின் பங்கு அதிகமாகவே உள்ளது. கழிவறை, பாத்திரம் தேய்க்கும் இடம் மற்றும் சமைத்த உணவு என எங்கும் உலா வந்து முகம் சுளிக்க வைக்கும் கரப்பான் பூச்சி. இந்த கரப்பான் பூச்சியை அடியோடு அழிப்பதற்கு சில வீட்டு மருந்துகளே போதுமானது. அதாவது பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை இவற்றினை கலந்து உருண்டையாக உருட்டி கரப்பான் பூச்சி அதிகம் நடமாடும் இடத்தில் வைக்கலாம்.

வேப்பெண்ணையை தண்ணீரில் கலந்து ஸ்ப்ரே பாட்டில் ஒன்றில் ஊற்றி தூங்கும் முன்பு சமையலறையில் தெளித்து விட்டால் கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது. பெப்பர்மின்ட் ஆயிலை உப்பு கலந்த தண்ணீருடன் கலந்து கரப்பான் மறைந்திருக்கும் இடத்தில் அடிக்க வேண்டும். பிரியாணிக்கு பயன்படுத்தக்கூடிய பிரியாணி இலையை நீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை கரப்பான் பூச்சி இருக்கும் இடத்தில் தெளித்தால் கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது. போரிக் ஆசிட் வேகமாக செயல்பட்டு கரப்பான் பூச்சியை அழித்து விடும். கரப்பான் பூச்சி இருக்கும் இடத்தில் இதனை தூவி விட்டால் உடனே கரப்பான் பூச்சி இறந்து விடும்.