தற்போது சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில், ஒரு கவரில் முதலைகள் சாப்பிடுவதற்காக ஒரு நபர் இறைச்சிகளை கொண்டு வந்தார். இதையடுத்து குளத்தில் உள்ள முதலைகளின் அருகில் வந்தார்.

அந்நபரை பார்த்ததும் ராட்சத முதலைகள் அருகில் வந்தது. இந்நிலையில் தன் கவரில் இருந்த உணவை எடுத்து அந்த முதலையின் வாயில் போடுகிறார். ஒவ்வொரு முதலையும் தன் வாய் திறக்கும் போது அந்நபர் உணவை வாயில் போடுகிறார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.