மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் மகன்களிடம் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயக்குமாரின் வாயில் இருந்த பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில் இருந்தது. இதுதொடர்பாகவும், பல்வேறு சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசாரின் விசாரணையில் பல்வேறு கேள்விகளுக்கு அவரது மகன்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.