கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் பேன், ஏசி இல்லாமல் மக்களால் இருக்க முடியவில்லை. பொதுவாக ஏசியை பயன்படுத்தும் போது மின்கட்டணம் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரிக்கும். இதனால், பயனாளர்கள் மின்கட்டணத்தை குறைக்க மின்வாரியம் புது யோசனையை கொடுத்துள்ளது. அதாவது ஏசியை 24 முதல் 26 டிகிரி செல்சியஸில் வைப்பதன் மூலம் 36 சதவீதம் மின்கட்டணத்தை சேமிக்கலாம். இதனை இன்றே உறுதி செய்து கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளது.