கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதி சாரம் பூங்கா நகரில் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய காவல் படையில் தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அக்ஷயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அக்ஷயாவின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், 9 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி சென்றனர்.

இதனையடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த அக்ஷயா பணம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.