கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜா கடை கிராமத்தில் சாம்பசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை சாம்பசிவத்தை தாக்கியது. இதனால் படுகாயமடைந்த சாம்பசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாம்பசிவத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே காட்டு யானையின் நடமாட்டம் இருப்பது குறித்து ஏற்கனவே வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.