திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வழக்கமாக நவம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். கடந்த இரண்டு வாரங்களாக பகல் நேரத்தில் நல்ல வெயிலும் மாலை இரவு நேரத்தில் பனி பொழிவும் அதிகமாக இருக்கிறது.

தற்போது தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகின்றனர். அவர்கள் பைன் பாரஸ்ட், வெளிநீர் வீழ்ச்சி, ப்ரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டு ரசிக்கின்றனர்.