திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மூனூர் நாகப்பன் பட்டியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒட்டன்சத்திரத்தில் இருக்கும் அரிசி கடையில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம்- திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது போடி நோக்கி சென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்திரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.