திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரம் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பழனி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ராமநாதன்நகர் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த டிராக்டரும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த காளிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று காளிமுத்துவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.