ஏர் இந்தியா விமானத்தில் தரமற்ற உணவு வழங்கியதாக பிரபல சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூர் குற்றம் சாட்டிய நிலையில் தொடர்ந்து சேவைகளை மேம்படுத்தி வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

பிரபல சமையல் கலைஞரான சஞ்சீவ் கபூர் ஏர் இந்தியா விமானத்தில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக அண்மையில் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதற்கிடையே தொடர்ந்து சேவைகளை மேம்படுத்தி வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.