KKR அணிக்கு எதிரான போட்டியில் நடுவரிடம் கோபத்தை வெளிப்படுத்திய விராட் கோலிக்கு போட்டி தொகையில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்ட உள்ளது. விராட் கோலி தனது இடுப்புக்கு மேலே வந்த பந்தை அடித்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதற்கு நடுவர் அவுட் கொடுக்கவே, நோ பால் கேட்டு முறையிட்டார். ஆனால் கோலி கிரீசுக்கு வெளியே நின்றதால் நடுவர் நோ பால் கொடுக்க மறுப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் கோபத்துடன் வெளியேறினார்.