மியான்மர் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று மிசோரம் மாநிலத்தில் தரையிறங்கியது. அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி காட்டுப்பகுதிக்குள் சென்று விபத்துத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணித்த 14 பேரில் ஆறு பேர் காயமடைந்தனர்.

மியான்மரில் ராணுவத்திற்கும் இனக்குழுவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இதில் ராணுவ வீரர்கள் சிலர் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தனர். அவர்களை அழைத்து செல்வதற்காக வந்த விமானம்தான் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.