இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் மூன்று மாதங்களை கடந்துள்ளது. இந்த போரினால் காசாவில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தினர் மத்திய காசா பகுதியில் வெடி பொருட்களை தயார் செய்து கொண்டிருந்த போது ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பத்து ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று மாத போரில் இதுதான் மிகவும் மோசமான தாக்குதல் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.