ஹரியானா மாநிலத்தில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். சாலையில் சென்ற மற்றொரு பேருந்தை பள்ளி பேருந்து ஓட்டுனர் முந்தி செல்ல முயன்றதே இந்த விபத்துக்கான காரணமாக அமைந்தது.

இன்று ரம்ஜான் பண்டிகையை அடுத்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் குறித்த பள்ளி இயங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.