தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது. இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 பணத்தோடு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் தயார் செய்யப்பட்டு நேற்று முதல் விநியோகம் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 2ஆவது நாளாக இன்றும் வீடுவீடாக டோக்கன் விநியோகிக்கும் பணிகள் நடைபெறும். நேற்று விடுபட்டவர்கள், வீட்டில் இல்லாதவர்களுக்கு இன்று டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் சென்று பொங்கல் பரிசை வாங்கலாம்.