SDPI கட்சியின் மதசார்பின்மை வெல்லட்டும் என்ற மாநாடு மதுரையில் நடைபெற்ற வரும் நிலையில் இதில் கலந்து கொள்வதற்காக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மேடையில் பேசிய இபிஎஸ், நான் முதலமைச்சராகவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. உங்களை மாதிரி தான் நான் கீழே அமர்ந்திருந்தேன் என கூறியுள்ளார். மேலும் கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து தவழ்ந்து வந்து தான் உயர்ந்த பதவியை அடைந்தேன். ஆனால் இதனை தமிழக முதல்வர் கொச்சைப்படுத்தி பேசுகிறார் என்று இபிஎஸ் கூறியுள்ளார்.