தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 8.30 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் காலை கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மிக கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது