தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு மாணவி ஒட்டப்பட்டியில் இருக்கும் ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த 13-ஆம் தேதி அதிகாலை வயிற்று வலியால் துடித்த அந்த மாணவிக்கு திடீரென குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. உடனே விடுதி காப்பாளர்கள் அந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பக்கத்து ஊரைச் சேர்ந்த மனோஜ்(21) என்பவர் மாணவியுடன் லிவிங் டுகெதர் வாழ்வில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாலிபருக்கும், மாணவியின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுவரை இருதரப்பினரும் எந்த புகாரும் கொடுக்கவில்லை. அந்த மாணவி விடுதியில் சேரும்போதே இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், விடுதி நிர்வாகத்தினர் அது பற்றி விசாரித்த போது தன் உடல்வாகே அப்படித்தான் எனக் கூறி மாணவி உண்மையை மறைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.