தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் 18 முதல் 35 வயது வரை உள்ள அனைத்து பட்டப்படிப்பு முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள இருப்பவர்கள் தங்களுடைய கல்விச்சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை பெற 27237124  என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.