கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் சேத்தியாத்தோப்பு பகுதியில் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவரும் விடுதியில் தங்கி இருக்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளி விடுதியில் தங்கி இருந்த ஒரு மாணவி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று மற்றொரு மாணவியும் விடுதியில் விஷம் குடித்தார்.

அவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் விடுதியில் தங்க விருப்பம் இல்லாமல் இரண்டு மாணவிகளும் அடுத்தடுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.