திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் படிப்பாதை, ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகியவை மூலமாக கோவிலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள திருமலைகிரி பகுதியை சேர்ந்த பக்தர்கள் குழுவினர் திருஆவினன்குடியில் இருந்து கிரேன் மூலம் பறவை காவடி எடுத்து பூங்கா ரோடு வழியாக கிரிவீதிகளை சுற்றி வலம் வந்தனர். இரண்டு பக்தர்கள் காவடி எடுத்து அவருடன் நடந்து சென்றனர். இந்நிலையில் பறவை காவடி எடுத்து பரவசபடுத்திய பக்தர்களை பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்தனர்.