கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரக்கண்டநல்லூர் தனலட்சுமி நகரில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளிப்பதாக சுகாதார துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட மருந்து கடையில் சோதனை நடத்தினர். அப்போது பால்ராஜ் என்பவர் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாரணைக்காக அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

அதன்படி காவல் நிலையத்திற்கு வந்த பால்ராஜ் காலையில் விசாரணைக்கு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நேற்று முன்தினம் காலை நீண்ட நேரமாகியும் அவர் விசாரணைக்கு வரவில்லை. அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது போலீசுக்கு பயந்து பால்ராஜ் குடும்பத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் தனிப்படை அமைத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.