அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஹானஸ்ட்டி டீலா டோரி என்ற பெண் தனது இரண்டு மாத குழந்தைக்கு மதுபானத்தை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை பிறந்த 7 வாரங்களே ஆன நிலையில் விடாமல் அழுது கொண்டிருந்ததால் குழந்தைக்கு மதுபானம் கொடுத்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த அதிகாரிகள் ட்டோரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.