காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு துக்ளக் லேன் பகுதியில் உள்ள பங்களாவை  மீண்டும் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க அலுவலகத்திற்கு ராகுல் காந்தி வந்தபோது அவரிடம் செய்தியாளர்கள் துக்ளக் லேன் இல்லம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி மொத்த இந்தியாவும் தனது வீடு தான் எனக் கூறியுள்ளார். 2004 ஆம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை ராகுல் காந்தி டெல்லி துக்ளக் லேன் பகுதியில் உள்ள 12 ஆம் என் பங்களாவில் தான் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.