சூப்பர் ஸ்டார் விவகாரத்தில் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். விஜய் கட்சி தொடங்கினால் கூட்டணியாக பார்க்க முடியாது. தனித்து போட்டியிட தான் நாம் தமிழர் கட்சி தயாராக இருக்கிறது. முதலில் விஜய் கட்சி தொடங்க வேண்டும். அதற்கு பிறகு கொள்கைகளை முன்வைக்க வேண்டும். அதன் பிறகு தான் ஒத்த கருத்து இருந்தால் இணைந்து பயணிக்க முடியும். கார்த்தி, சூர்யா, சிம்பு போன்றவர்களுக்கும் பிரச்சினை வரும் பொழுது நான் பேசியிருக்கிறேன். ரசிகர் மன்றத்தை வைத்து நான் ரசிகர்களை சந்திக்கவில்லை.

நேரடியாக மக்களை சந்தித்து படையை திரட்டினோம் ‘சூப்பர் ஸ்டார் என்பது பட்டம் அது பட்டயம் கிடையாது. அந்தந்த காலத்தில் ஒருவர் சூப்பர் ஸ்டாராக வருவார்கள். இந்த தலைமுறையில் விஜய் உயர்ந்து நிற்கிறார். சரத்குமார் சொல்லியது சரிதான். ஒரு தமிழன் சூப்பர் ஸ்டார் என்றால் உங்களால் ஏன் தாங்க முடியவில்லை? ரஜினியிடம் கேட்டாலும், அவரும் இதைத்தான் சொல்லுவார். அவரும் ஒத்துக் கொண்டு விட்டார்’ என்றார்.