காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று (ஜன,.17) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல் துறை அறிவித்து உள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே சூழ்நிலைக்கு தகுந்தபடி கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளது.

# காமராஜர் சாலையில் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாகும் வரை எந்த வித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது.

# உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகே மக்கள் கூட்டம் மிக அதிகமாகும் போது, வடக்கில் இருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை -முத்துசாமி பாயினட் -வாலாஜா பாயின்ட் – அண்ணாசாலை பெரியார் சிலை-அண்ணாசிலை – வெல்லிங்டன் பாயின்ட் – ஸ்பென்சர் சந்திப்பு – பட்டுளாஸ் சாலை – மணி கூண்டு – GRH பாயின்ட் வழியே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சென்று, தங்களது இலக்கினை அடையலாம்.

# அடையாறில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா சாலை வழியே அண்ணாசாலை சென்று தங்களது இலக்கினை அடையலாம்.

# அதோடு பாரதி சாலையானது கண்ணகி சிலையில் இருந்து ஒருவழிப் பாதையாகவும், வாலாஜா சாலையிலிருந்து பெல்ஸ் ரோடு வாகனங்கள் போக தடை செய்தும், பாரதி சாலையிலிருந்து பெல்ஸ் ரோடு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் செய்யப்பட்டு உள்ளது (பெல்ஸ் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்படும்).

# பாரதி சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் போக தடைசெய்தும், வாலாஜா சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. (விக்டோரியா விடுதி சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்படும்).

# இவ்வாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை மாற்றங்களை செய்யும் போதெல்லாம் 10 நிமிடங்களுக்குள் Google வரை படத்தில் RoadEaseapp வாயிலாக தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும்.

# இதன் வாயிலாக வாகன ஓட்டிகள் தங்கள் Google Map வாயிலாக மாற்று பாதைகளை கண்காணித்து அவர்கள் போகக்கூடிய இலக்கை சென்றடையும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.