காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  காணும் பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மக்கள் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களுக்கு வருவார்கள். சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள், வண்டலூர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடமான மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், கிண்டி சிறுவர் பூங்கா, மயிலாப்பூரு கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட பல இடங்களில் பாதுகாப்பது பலப்படுத்தப்பட்டுள்ளது.