தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 25 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துவரப்பட்டதாக தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

ஆனால் அவருக்கு சளி மற்றும் தொடர் இருமல் இருப்பதால் இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது உடல்நிலை குறித்து மீயாட் மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியானால் தான் உண்மையான நிலவரம் தெரியவரும்.