சென்னை எண்ணூர் வாயு கசிவால்  காற்றும் கடல் நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. வாயுகசிவு நடைபெற்ற நேரத்தில் காற்று மேற்கு மற்றும் தென்மேற்காக சென்னையை நோக்கி வீசியது அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கடலில் பத்து மடங்கு அம்மோனியாவும் காற்றில் ஐந்து மடங்கு அம்மோனியாவும் கலந்து உள்ளதால் எண்ணூர் மட்டுமல்லாமல் சென்னைக்கும் இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தகவல் சென்னை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.