தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு தற்போது நல்ல ஓய்வு தேவை என்று இயக்குனர் பாண்டியராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இப்போது சரியான ஓய்வு தேவை. அவர் பூரண குணமடையும் வரை அவரை இப்படி எல்லாம் கஷ்டப்படுத்த வேண்டாம் ப்ளீஸ். பிடித்த ஒரு நல்ல மனிதரை இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது விஜயகாந்த் சேரில் உட்காரக்கூட முடியாமல் மிகவும் சிரமப்பட்ட நிலையில் அது தொடர்பான வீடியோ வெளியாகி ரசிகர்களை கலங்க வைத்தது குறிப்பிடத்தக்கது.