தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூரி ஹீரோவாகவும் களமிறங்கியுள்ள நிலையில் தனது வெற்றி பயணத்தை தொடர்கிறார். தற்போது விடுதலை 2 திரைப்படத்தில் இவர் பிஸியாக நடித்து வரும் நிலையில் நேற்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10 லட்சம் ரூபாய் நிதி உதவியை அமைச்சர் உதயநிதி இடம் வாங்கினார்.

இந்த நிலையில் நடிகர் சூரி மதுரையில் ஆரம்பித்த அம்மன் மெஸ் மற்றும் ஐயன் ரெஸ்டாரன்ட் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆதரவை பார்த்த சூரி சென்னை தி நகரில் அம்மன் மெஸ் கிளையை திறக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனை சிவகார்த்திகேயனும் விஜய் சேதுபதியும் தான் இணைந்து திறந்து வைக்க உள்ளனர்.