தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கடந்த வருடம் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் தொழில் பார்ட்னருமான சோகேல் கத்துரியா என்பவரை டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வீடியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ தொடர்பான டிரைலரில் தன்னுடைய முதல் காதல் குறித்து பேசி உள்ளார். அதாவது நடிகை ஹன்சிகா சிம்புவை வாலு படத்தில் நடிக்கும் போது காதலித்தார். இருவரும் தங்களுடைய காதலை சமூக வலைதளங்களில் வெளிப்படையாக அறிவித்துவிட்ட நிலையில் நடிகை ஹன்சிகாவின் தாயார் திருமணத்திற்கு சம்மதிக்காததால் சிம்பு மற்றும் ஹன்சிகாவின் காதல் முறிந்தது.

இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி சிம்புடனான காதல் தொடர்பாக பேசியதாவது, நான் மக்களின் பார்வையில் ஏற்கனவே ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளேன். அதை நான் மீண்டும் ஒருபோதும் செய்ய மாட்டேன். ஒருவேளை நான் மீண்டும் ரிலேஷன்ஷிப்பில் இருக்க வேண்டுமானால் அது என்னுடைய திருமணமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய திருமணத்தின் போது 19 நாட்களாக எரிமலை போல் மன கொந்தளிப்பில் இருந்தேன். ஒரு பேப்பர் மற்றும் பேனா இருந்தால் போதும் அடுத்தவரின் வாழ்க்கையை நாசமாக்கிவிட முடியும் என்று நினைக்கிறார்கள் என்று எமோஷனலாக பேசியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.