தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் பாடகர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர். நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்குப் பிறகு சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு இனி இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக ஒரு புது தகவல் பரவி வருகிறது. நடிகர் சிம்புவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கிய நிலையில், இவர்கள் கூட்டணியில் அச்சம் என்பது மடமையடா மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்களும் ரிலீஸ் ஆகி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. நடிகர் சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயா 2 மற்றும் வெந்து தணிந்தது காடு 2 படங்களை இயக்குமாறு கௌதம் மேனனிடம் கூறியுள்ளாராம். ஆனால் இயக்குனர் கௌதம் மேனன் அடுத்தடுத்த படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருவதால் தற்போதைக்கு இரண்டாம் பாகங்களை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாகத்தான் நடிகர் சிம்பு இனி கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க கூடாது என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவல்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.