தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தையை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட யாருக்கும் விடுப்பு அல்லது ஓய்வு இல்லை. வார விடுமுறை அல்லது பணி ஓய்வில் இருப்பவர்களும் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. பணிக்கு வராத தொழிலாளர்கள் மீதும் போராட்டத்தில் கலந்து கொள்ள தூண்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.