குடிபோதையில் வந்து தினமும் கொடுமை செய்யும் கணவனை விவாகரத்து செய்ய மனைவிக்கு முழு உரிமை உள்ளது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கல்லூரி பேராசிரியை விவாகரத்து மேல் முறையீட்டு வழக்கில், கணவர் டேவிட் எந்த வேலைக்கும் செல்லாமல் குடிக்கு அடிமையானது மட்டுமல்லாமல் மனைவி லீலாவின் ஒழுக்கத்தின் மீது சந்தேகப்பட்டு உடலாலும் மனதாலும் கொடுமை செய்ததால் விவாகரத்து செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.