உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயணங்களில் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. வாட்ஸ் அப் இந்தியாவில் ஒரு எளிமையான தகவல் தொடர்பு சாதனமாகவும் உள்ளது.

அது மட்டுமல்லாமல் கோப்புகளையும் எளிதில் பகிர மிகவும் உதவியாக உள்ளது. வாட்ஸ் அப்பை மொபைல் மற்றும் டெக்ஸ்டாப்பில் பயன்படுத்தும் வசதி உள்ள நிலையில் தற்போது புதிய அப்டேட்டை அந் நிறுவன சிஇஓ மார்க் ஜூக்கர் பெர்க் அறிவித்துள்ளார். அதாவது ஒரே whatsapp எண்ணை இனி நான்கு வெவ்வேறு மொபைல்களில் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.