புதிதாக ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் வாங்குவதற்கு எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால் அதன் விலை அதிகமாக இருப்பதால் அதை வாங்குவது கடினமாக இருக்கும். ஒரு சிலர் இஎம்ஐ மூலமாக வாங்கி விடுவார்கள். ஆனால் அதை ஒவ்வொரு மாதமும் செலுத்துவதற்கு சிரமமாக இருக்கும். இனி அவ்வாறு சிரமப்பட வேண்டியதில்லை. இதற்கு தீர்வு காண்பதற்காக புதிய வசதி ஒன்று வந்துவிட்டது. ஜியோ நிறுவனம் சலுகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அது ஆயிரக்கணக்கான ரூபாய்களை மிச்சப்படுத்த உதவும் ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டம் மட்டுமல்லாமல் லேப்டாப் மற்றும் தொலைபேசிகளை வாடகைக்கு விடும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு புதிய சேவை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன்கள் வாடகைக்கு கிடைக்கும். அதை தவிர டேட்டா பலன்களையும் தர முடியும். இந்த திட்டத்தின் மூலம் லேப்டாப், ஸ்மார்ட்போன், ஏர் பைபர் போன்ற எந்த வசதியையும் முழு விலை கொடுத்து வாங்குவதற்கு பதிலாக வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே இந்த சேவை பயன்படுத்த முடியும்.