செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் திருவிழா நடைபெற்ற நிலையில் அதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வேலை நாள் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 19ஆம் தேதி அதாவது வருகின்ற சனிக்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த உத்தரவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்துள்ளார்.