இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆன்லைன் திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் தேடி திருமணம் செய்கின்றனர். இந்நிலையில் இதன் மூலமாக வரன் தேடுவோர் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தவகையில் புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் பாலாஜி. மனைவியை பிரிந்து வாழும் இவருக்கு 2வது திருமணம் செய்ய பெற்றோர் Matrimonyல் பதிவு செய்தனர்.

இதில், சிரியாவில் மருத்துவராக பணியாற்றி வருவதாக கூறி ஒரு பெண் பாலாஜிக்கு அறிமுகமானார். அவரது பேச்சில் பாலாஜி மயங்கவே, தனக்கு பணத்தேவை இருப்பதாக கூறி, அப்பெண் ரூ.34 லட்சம் வாங்கியுள்ளார். பின், அவர் சரிவர பேசாமல் இருக்கவே, தான் ஏமாந்ததை உணர்ந்து பாலாஜி புகார் அளித்தார்.