உத்தரகாண்ட் சிவில் விமான போக்குவரத்து துறையில் நிதிப் பிரிவில் பணிபுரிந்து வரும் அதிகாரி ஜிதேந்திர குமார் சைனி. இவர் இன்று அதிகாரிகள் உடன் ஹெலிகாப்டரில் கேதார்நாத் சென்று உள்ளார். கேதார்நாத் சென்றவுடன் ஹெலிகாப்டர் முன் நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

இதனிடையே ஹெலிகாப்டரின் கூர்மையான இறக்கைகள் நிற்காமல் சுற்றிக் கொண்டிருந்தது. இந்நிலையில் செல்பி எடுக்க முயன்ற ஜிதேந்திர குமார் சைனியை ஹெலிகாப்டரின் கூர்மையான இறக்கைகள் வெட்டியது. இதனால் சம்பவ இடத்திலேயே ஜிதேந்திர குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.