நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி தெற்கு பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில் – ஜெயரஞ்சனி தம்பதி. ஜெயரஞ்சனி நேற்று இரவு தனது வீட்டின் அருகே இருந்த வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை காட்டு விரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது.

இதனால் மயங்கி விழுந்த ஜெயரஞ்சனியை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.