திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சாலையோரம் கடந்த 23-ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு வியாபாரிகள் பூசணிக்காய் குவித்து விற்பனை செய்தனர். இந்நிலையில் விற்பனை செய்யாத பூசணி காய்களை ஆங்காங்கே சாலையோரம் வியாபாரிகள் போட்டு சென்றனர்.

இவ்வாறாக பல்வேறு இடங்களில் டன் கணக்கில் பூசணிக்காய்கள் குவிந்து காணப்படுகிறது. பல இடங்களில் பூசணிக்காய் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே விற்பனை ஆகாத காய்கறிகளை அப்புறப்படுத்துவதற்கு உரிய வழிமுறைகளை கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.