தமிழகத்தில் வனத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு முதல் முறையாக குரூப்-4 தேர்வுநடத்தப்பட உள்ளது. 363 வனக்காவலர் பணியிடங்களுக்கும், 814 வன கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட உள்ளது. வருகின்ற ஜூன் 9ஆம் தேதி தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.tnpsc.gov.in மற்றும் www tnpscexams.in ஆகிய இணையதளங்களில் இன்று முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.