வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் அடிக்கடி வங்கி சார்பில் வெளியிடப்பட்டு வரும் அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும். வங்கி பரிவர்த்தனை தொடர்பான மற்றும் புதிய விதிமுறைகளை அடிக்கடி வங்கிகள் வெளியிட்டு வரும் நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய கேஒய்சி சரிபார்ப்பை டிசம்பர் 18ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்காத பட்சத்தில் வாடிக்கையாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஒய்சி சரிபார்ப்பு பணிக்கு அடையாளச் சான்று, முகவரி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பான் கார்டு மற்றும் வருமானச் சான்று, கைபேசி எண் போன்ற ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். இந்தப் பணியை இதுவரை முடிக்காத வாடிக்கையாளர்கள் உடனே முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.