இந்தியாவில் நடந்த பயங்கரவாத சம்பவங்கள் பலவற்றிற்கு மூளையாக செயல்பட்ட மும்பையை சேர்ந்த தாவூத் இப்ராஹிம் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். இவரது தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசும் அமெரிக்கா அறிவித்திருந்தது.

1993 2008 ஆகிய ஆண்டுகளில் மும்பையில் நடந்த தாக்குதலில் இவர் தொடர்புடையவர். இந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற தாவூத் இப்ராஹீமிற்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு உடல் நல கோளாறு காரணமாக பாகிஸ்தான் காராச்சியில் உள்ள மருத்துவமனையில் தாவூத் இப்ராஹிம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலத்த பாதுகாப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடலில் விஷம் செலுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.