ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இரண்டாவது வருடத்தை நெருங்கும் நிலையில் கடந்த ஒரு மாதமாக இரண்டு தரப்பினரும் ட்ரோன்கள் மூலமாக அதிக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்யா அனுப்பிய 20 ட்ரோன்கள் மற்றும் எக்ஸ் 59 ஏவுகணை போன்றவற்றை உக்ரைன் அளித்துள்ளது.

இதில் ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்திய போது அதன் பகுதிகள் ஒடைசாக் அருகே இருந்த வீட்டின் மீது விழுந்து ஒருவர் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.