ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இரண்டாவது வருடத்தை நெருங்கும் நிலையில் கடந்த ஒரு மாதமாக இரண்டு தரப்பினரும் ட்ரோன்கள் மூலமாக அதிக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று உக்ரைன் ரஷ்யாவுக்கு சொந்தமான ராணுவ விமான தளத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

அதேபோன்று மூன்று பிராந்தியங்களை குறிவைத்து உக்ரைன் செலுத்திய 35 ட்ரோன்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.