ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு வர வேண்டாம் என்று பொது மக்களுக்கு கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அன்றைய தினம் லட்சக்கணக்கானோர் அயோத்தியில் கூடுவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில் நிர்வாகம் இதனை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் மோடி உட்பட பத்தாயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.