மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி ஊதிய உயர்வு, எட்டாவது ஊதிய குழு அமல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். இந்த வேலையில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை எழும்பியுள்ளது. கடைசியாக கடந்த 2020 ஆம் வருடம் வங்கி ஊழியர்களுக்கு ஊதியம் அதிகரிக்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தமானது 2022 நவம்பர் மாதத்தோடு முடிவடைந்த நிலையில் 12வது ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை விரைந்து தொடங்கி டிசம்பர் ஒன்றாம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் இந்திய வங்கிகள் கூட்டமைப்பிற்கு உத்தரவிட்டிருக்கிறது.

தற்போது இந்த ஒப்பந்த காலம் முடிவடைந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் ஊதியம் தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் பலரும் பங்கேற்பதால் முடிவை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் அடுத்த முறை ஊதிய ஒப்பந்த கால முடிவதற்குள் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.