கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் பரங்கிப்பேட்டையில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தினமும் பள்ளிக்கு செல்லும் போது சின்னூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான பொன்மாறன்(19) மாணவியை பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு கூறி தொந்தரவு அளித்துள்ளார்.

இதனையடுத்து பொன்மாறன் மாணவியின் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து வைத்துக் கொண்டு அடிக்கடி தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தந்தை பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பொன்மாறனை கைது செய்தனர்.